வெளிநாடுகளில் உள்ள சிலைகளை மீட்க ஒத்துழைப்பு வேண்டும் - பொன் மாணிக்கவேல்

வெளிநாடுகளில் உள்ள சிலைகளை மீட்க அரசுகள் ஒத்துழைக்க வேண்டும் என சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் வலியுறுத்தியுள்ளார்.
வெளிநாடுகளில் உள்ள சிலைகளை மீட்க ஒத்துழைப்பு வேண்டும் - பொன் மாணிக்கவேல்
x
* திருவாரூரில் சிலைகள் தொடர்பான ஆய்வு பணிகள் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பொன் மாணிக்கவேல் பின்னர் செய்தியாளர்களிடம்  பேசுகையில், இந்த ஆய்வுப் பணிகளுக்கு பிறகு சிலைகளின் தன்மை குறித்து தெரிய வரும் என்றார். 

* தமிழகத்தில் காணாமல் போன ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிலைகள் மீட்கப்பட்டுள்ளதாக கூறினார். வெளிநாடுகளிலிருந்து சிலைகளை எடுத்து வர உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கு மத்திய, மாநில அரசுகள் உறுதுணையாக இருக்க வேண்டும் எனவும் பொன் மாணிக்கவேல் தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்