சென்னை : டெங்கு காய்ச்சலுக்கு இரட்டை குழந்தைகள் பலி

சென்னை மாதவரத்தில் டெங்கு காய்ச்சலுக்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த இரட்டை குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : டெங்கு காய்ச்சலுக்கு இரட்டை குழந்தைகள் பலி
x
சென்னை மாதவரத்தில் டெங்கு காய்ச்சலுக்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த இரட்டை குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாதவரம் தணிகாச்சலம் பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவரது இரட்டை குழந்தைகள் தட்சன், தீக்ஷா இருவரும் 2ஆம் வகுப்பு படித்து வந்தனர். இந்நிலையில், கடந்த 5 நாட்களுக்கு முன்பு இருவரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி இரட்டை குழந்தைகள் இருவரும் நேற்றிரவு உயிரிழந்தனர். 

Next Story

மேலும் செய்திகள்