புதுச்சேரியில் பன்றி காய்ச்சலுக்கு ஒருவர் பலி : 39 பேருக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி

தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 39 பேருக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறி கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் ஜிப்மரில் பெண் ஒருவர் பன்றி காய்ச்சலுக்கு பலியாகி உள்ளதாகவும் சுகாதார துறை இயக்குநர் ராமன் தெரிவித்தார்.
புதுச்சேரியில் பன்றி காய்ச்சலுக்கு ஒருவர் பலி : 39 பேருக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி
x
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில், பன்றி காய்ச்சலுக்கு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். புதுச்சேரி சுகாதாரத் துறை சார்பில், 'உலக அயோடின் குறைபாடு கோளாறுகள் தடுப்பு தின' விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை சுகாதார துறை இயக்குநர் ராமன் கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த, நாளை முதல் நிலவேம்பு கசாயம் வழங்கப்ப உள்ளதாக கூறினார். தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 39 பேருக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறி கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், ஜிப்மரில், பெண் ஒருவர் பன்றி காய்ச்சலுக்கு பலியாகி உள்ளதாகவும் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்