காவலர் வீர வணக்க நாள் விழா : முன்னாள் டிஜிபி மீது கிரண்பேடி குற்றசாட்டு

புதுச்சேரியில் நடைபெற்ற காவலர் வீர வணக்க நாளில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, கடந்த ஆண்டு வீர வணக்க நிகழ்ச்சியில் அப்போதைய டிஜிபி சுனில் குமார் கெளதம் தம்மை அழைக்கவில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
காவலர் வீர வணக்க நாள் விழா : முன்னாள் டிஜிபி மீது கிரண்பேடி குற்றசாட்டு
x
புதுச்சேரியில் நடைபெற்ற காவலர் வீர வணக்க நாளில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, கடந்த ஆண்டு வீர வணக்க நிகழ்ச்சியில் அப்போதைய டிஜிபி சுனில் குமார் கெளதம் தம்மை அழைக்கவில்லை என்றும், அப்போது அவர் பயத்தில் இருந்தார் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார். புதுச்சேரியில் காவலர் வீர வணக்க நாள் கோரிமேடு காவலர் மைதானத்தில் உள்ள காவலர் நினைவிடத்தில் கடைப் பிடிக்கப்பட்டது. இதில் ஆளுநர் கிரண்பேடி, அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் காவல் துறை அதிகாரிகள் ஆகியோர் பணியின் போது உயிர் நீத்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். 


Next Story

மேலும் செய்திகள்