உரிய நேரத்தில் விசாரிக்காததால் பெண் கொலை செய்யப்பட்ட பரிதாபம் : காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

சென்னையில் பெண் அளித்த புகாரை உரிய நேரத்தில் விசாரிக்காத, சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
உரிய நேரத்தில் விசாரிக்காததால் பெண் கொலை செய்யப்பட்ட பரிதாபம் : காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்
x
செட்டி தோட்டம் பகுதியில் பிரேம்குமார் என்பரின் 16 வயது மகள் புவனேஸ்வரி நேற்று கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்தபோது பக்கத்து வீட்டில் இருக்கும் வினோத் குமார் என்பவர் பாலியல் தொந்தரவு செய்ததாக போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில், பிரேம்குமாரின் மகள்கள் மேரி, மெர்லின் ஆகியோர் வினோத்குமார் வீட்டுக்கு சென்று நியாயம் கேட்டுள்ளனர். அப்போது கஞ்சா போதையில் இருந்த  வினோத்குமார், மற்றும் அவரின் உறவினர்கள் தாக்கியதில் மேரி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வடசென்னை இணை ஆணையர், மாதவரம் துணை ஆணையர் ஆகியோர் நேரில் விசாரணை நடத்தி மாநகர காவல் ஆணையருக்கு அறிக்கை அளித்தனர். இதனைத் தொடர்ந்து  ராயபுரம் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் ராஜா ராபர்ட் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்