"அய்யப்ப பக்தியுடைய பெண் தடுக்கப்படக்கூடாது என்பதே தீர்ப்பு" - ஆடிட்டர் குருமூர்த்தி

சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என ஆடிட்டர் குருமூர்த்தி கூறியுள்ளார்.
அய்யப்ப பக்தியுடைய பெண் தடுக்கப்படக்கூடாது என்பதே தீர்ப்பு  - ஆடிட்டர் குருமூர்த்தி
x
சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என ஆடிட்டர் குருமூர்த்தி கூறியுள்ளார். சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர், வளர்ந்த நாடுகளை விட, இந்தியாவில் குறைந்த அளவிலேயே பங்கு சந்தைகளில் முதலீடு செய்வதாகவும், 16ஆம் நூற்றாண்டில் இந்தியாவும் சீனாவும் பொருளாதாரத்தில் சமமாக இருந்ததாகவும் தெரிவித்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சபரிமலைக்கு சமூக ஆர்வலர்கள் தான் செல்ல முயற்சிப்பதாகவும், பக்தியுள்ளவர்களை அவமானப்படுத்தவே அவர்கள் செல்வதாகவும் விமர்சித்தார். பக்தியை சட்டத்தால் கட்டுப்படுத்த முடியாது என கூறிய குருமூர்த்தி, உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். 


Next Story

மேலும் செய்திகள்