மீனவர் பிரச்சினை ஒருபோதும் முடியாது - சாமிநாதன், இலங்கை அமைச்சர்
இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினை ஒருநாளும் முடியாது என்றும் இறைவன் தான் அதை தீர்க்க வேண்டும் எனவும் இலங்கை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினை ஒருநாளும் முடியாது என்றும், இறைவன் தான் அதை தீர்க்க வேண்டும் எனவும் இலங்கை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை சாய்பாபா ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு ஆராதனையில், அவர் கலந்து கொண்டார். அப்போது, சாய் பாபா புகைப்படத்துடன் கூடிய 100 தபால் தலைகள் வெளியிடப்பட்டன. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை அமைச்சர் சாமிநாதன், ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள தமிழர் நிலங்கள் அனைத்தும், வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் விடுவிக்கப்படும் என்றார்.
Next Story