நாயை கத்தியால் குத்தி கொலை செய்த போதை ஆசாமி கைது

சென்னை நங்கநல்லூரில், நாயின் கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்
நாயை கத்தியால் குத்தி கொலை செய்த போதை ஆசாமி கைது
x
சென்னை நங்கநல்லூர் எம்ஜிஆர் சாலை அருகே ராஜா என்பவரை கண்டு, அப்பகுதியில், இருந்த நாய் ஒன்று குரைத்துள்ளது. போதையில் இருந்த
அந்த நபர் நாயை விரட்டியுள்ளார். பயத்தில் அங்குள்ள டெய்லர் கடைக்கு நாய் செல்லவே கடைக்குள்ளேயே நாயை கத்தியால் கழுத்தில் குத்தியுள்ளார். இதனால் துடிதுடித்த நாய் 4 மணி நேரம் போராடி உயிரிழந்தது. இதனை நேரில் பார்த்த டெய்லர் கடைக்காரர் கொடுத்த தகவலின் பேரில் புளூகிராஸ் அமைப்பினர் பழவந்தாங்கல் காவல் நிலையத்தில், ராஜா மீது புகார் அளித்தார்.  புகாரின் பேரில் போலீசார் போதை ஆசாமி ராஜாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்