குட்கா முறைகேடு : குடோன் உரிமையாளர்களுக்கு ஜாமின் மறுப்பு

குட்கா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட மாதவராவ் உட்பட 3 பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது.
குட்கா முறைகேடு : குடோன் உரிமையாளர்களுக்கு ஜாமின் மறுப்பு
x
குட்கா விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சிபிஐ, செங்குன்றம் குட்கா குடோன் உரிமையாளர்கள் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா மற்றும் அதிகாரிகள் என ஆறு பேரை கைது செய்தது. அவர்களில், மாதவராவ், உமா சங்கர் குப்தா, சீனிவாசராவ் ஆகியோர் ஜாமீன் கோரி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். 

இந்த மனுக்கள் நீதிபதி திருநீல பிரசாத் முன் விசாரணைக்கு வந்த போது, முக்கிய நபர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதால் ஜாமின் வழங்க கூடாது என்றும், அவர்களை  ஜாமீனில் விடுவித்தால், சாட்சிகளை கலைக்க கூடும் என சிபிஐ தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மாதவராவ் உள்ளிட்ட  3 பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 


Next Story

மேலும் செய்திகள்