கடத்தப்பட்ட இரு தினங்களில் சிலைகள் மீட்பு : ஐஜி பொன்.மாணிக்கவேல் விசாரணை

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே பெருமாள் கோயிலில் இருந்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு கடத்தப்பட்ட சிலைகள் திண்டுக்கலில் மீட்கப்பட்டது.
கடத்தப்பட்ட இரு தினங்களில் சிலைகள் மீட்பு : ஐஜி பொன்.மாணிக்கவேல் விசாரணை
x
2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள், கோயிலில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான 4 ஐம்பொன் சிலைகள் கடந்த 14ஆம் தேதி கடத்தப்பட்டது. கோயில் அர்ச்சகர் ரெங்கநாத பட்டர் காடுபட்டி காவல்துறையிடம்ட புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட கண்காணிப்பாளர் மணிவண்ணன், அங்கிருந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார். அதன் அடிப்படையில் கொள்ளையர்களை தேடும் பணி நடைபெற்றது. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் விளாங்குடி என்ற இடத்தில் அந்த நான்கு சிலைகளும் மீட்கப்பட்டது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.பொண்மாணிக்கவேல் இந்த கொள்ளை தொடர்பாக இன்று விசரணை நடத்த உள்ளார். 

இதனிடையே, மதுரை மாவட்டம் சோழவந்தான் காவல்நிலையத்தில், மீட்கப்பட்ட சிலைகள் குறித்து ஐஜி பொன்.மாணிக்கவேல் மற்றும் தென் மண்டல ஐ.ஜி. சண்முக ராஜேஸ்வரன்
ஆகியோர் விசாரணை நடத்தினர். கோயில் நிர்வாகி மற்றும் ஊழியர்களிடம் நடத்திய விசாரணையில் மீட்கப்பட்ட சிலைகள் குருவித்துறை பெருமாள் கோயிலுக்கு சொந்தமானது என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. சிலை கடத்தல்காரர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. 







Next Story

மேலும் செய்திகள்