மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி தொடக்கம்

வாக்குப்பதிவு இயந்திரம் உள்ளிட்ட கருவிகளை சரிபார்க்கும் பணிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி தொடக்கம்
x
பெங்களூருவில் இருந்து கடந்த மாதம்  3 ஆயிரத்து 820 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 2 ஆயிரத்து 80 கண்ட்ரோல் யூனிட்டுகள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிவதற்கான கருவிகள் உள்ளிட்டவை புதுக்கோட்டை மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்டன. அவைகள், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஒரு அறையில் பாதுகாப்பாக வைத்து சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில், வாக்குப்பதிவு இயந்திரம் உள்ளிட்ட கருவிகளை சரிபார்க்கும் பணி இன்று தொடங்கியது. சுமார் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்