திட்டக்குடி : குழந்தையை கொன்றுவிட்டு தம்பதி தற்கொலை

திட்டக்குடி அருகே இரண்டரை வயது குழந்தையை கொன்றுவிட்டு, தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திட்டக்குடி : குழந்தையை கொன்றுவிட்டு தம்பதி தற்கொலை
x
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த இடைசெருவாய் கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கும் அவரது மனைவி உஷாவிற்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், இன்று அதிகாலை நீண்ட நேரமாகியும் பிரகாஷ் வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து, அருகில் வசிப்பவர்கள் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்த போது, பிரகாஷ்-உஷா மற்றும் அவர்களது குழந்தை ஆகியோர் இறந்த நிலையில் கிடந்துள்ளனர். சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். அதில், உஷாவின் தங்கைக்கும், கணவருக்கும் இடையே இருந்த தகாத உறவு தான் தற்கொலைக்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்