கன்னியாகுமரி காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தில் கூச்சல், குழப்பம்

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில், கூச்சல் குழப்பம் நிலவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தில் கூச்சல், குழப்பம்
x
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில், கூச்சல் குழப்பம் நிலவியதால் பரபரப்பு ஏற்பட்டது. நகர்கோவிலில் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தொண்டர்களின் தொடர் கூச்சல் மற்றும் கிளை நிர்வாகிகள் மேடையில் ஏறியதால் ஆத்திரம் அடைந்த சிறப்பு விருந்தினரும், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலாளருமான சஞ்சய் தத் மேடையில் இருந்து இறங்கினார். முக்கிய நிர்வாகிகளின் நீண்ட நேரம் கேட்டுக்கொண்டபோதும், தனது தகுதிக்கு நிகரானவர்கள் இல்லாத மேடையில் ஏற மாட்டேன் என கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. கட்சிக்காக உழைத்த தங்களை தேசிய நிர்வாகி தகுதி இல்லாதவர் என கூறியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பாதிக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினர்.

Next Story

மேலும் செய்திகள்