திருவிடைமருதூர் குளத்தில் கிடைத்த சிவலிங்கம்...
திருவிடைமருதூர் வட்டம் பந்தநல்லூர் நெய்க் குப்பை கிராமத்தில் குளத்தை சுத்தம் செய்தபோது சிவலிங்கம் ஒன்று கிடைத்தது.
திருவிடைமருதூர் வட்டம், பந்தநல்லூர் நெய்க் குப்பை கிராமத்தில் குளத்தை சுத்தம் செய்தபோது, சிவலிங்கம் ஒன்று கிடைத்தது. தகவலறிந்து வந்த திருவிடைமருதூர் வட்டாட்சியர் ராஜேஸ்வரி, காவல் துணை கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் ஆகியோர் சிலையை எடுத்து செல்ல முற்பட்டனர். இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை சமாதனப்படுத்திவிட்டு அதிகாரிகள் சிலையை கொண்டு சென்றனர்.
Next Story