சிதம்பரம் நடராஜருக்கு நாட்டிய அர்ப்பணம் - 3,000 நாட்டிய கலைஞர்கள் பங்கேற்பு

சிதம்பரம் நடராஜர் கோயிலில் 3 ஆயிரம் நாட்டிய கலைஞர்கள் நடனமாடி நடராஜருக்கு நாட்டிய அர்ப்பணம் செய்தனர்.
சிதம்பரம் நடராஜருக்கு நாட்டிய அர்ப்பணம் - 3,000 நாட்டிய கலைஞர்கள் பங்கேற்பு
x
சிதம்பரம் நடராஜர் கோயிலில் 3 ஆயிரம் நாட்டிய கலைஞர்கள் நடனமாடி நடராஜருக்கு நாட்டிய அர்ப்பணம் செய்தனர். சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி அன்று நாட்டியாஞ்சலி தொடங்கி 5 தினங்களுக்கு நடைபெறும். 

இந்த விழாவின் நிறைவு நாளான நேற்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த, நாட்டியக் கலைஞர்கள் 3 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் கோயிலுக்குள் , பல்லவி, அனுபல்லவி, சரணம், கீர்த்தனை என 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு கோயிலுக்குள் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் நடனம் ஆடி தங்களது நாட்டிய நடனத்தை நடராஜருக்கு அர்ப்பணித்தனர். சிதம்பரம் கோயிலில் நாட்டிய அர்ப்பணம் செய்ய வேண்டும் என்கிற தங்களது பலநாள் கனவு நனவானதாகவும்  நாட்டியக் கலைஞர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்