"ஜெயலலிதா பெயரில் உலகளவிலான சதுரங்க போட்டி" - அமைச்சர் செங்கோட்டையன்

ஜெயலலிதா பெயரில் உலகளவில் சதுரங்கப் போட்டியை நடத்த பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்த வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா பெயரில் உலகளவிலான சதுரங்க போட்டி - அமைச்சர் செங்கோட்டையன்
x
மாநில அளவிலான சதுரங்க போட்டிகளின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. தொடங்கி வைத்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், சதுரங்க போட்டிக்கான பயிற்சிகள் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தான் தொடங்கியதாக தெரிவித்தார்.

மாணவர்களின் கூர்மையான அறிவை வளர்ப்பதற்கு சதுரங்க போட்டிகள் உதவும் என்றும் அமைச்சர் கூறினார். சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்துக்கு நிகராக தமிழக பாடத்திட்டங்களும், பயிற்சி முறைகளும் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும் செங்கோட்டையன் தெரிவித்தார். நிகழ்ச்சிக்கு பின், செய்தியார்களிடம் பேசிய அவர், விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க வேலைவாய்ப்பில் 2 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்