அய்யனார் கோயில் சிலை எடுப்பு திருவிழா: பொம்மையை தலையில் சுமந்து சென்று நேர்த்திக்கடன்

திருமங்கலம் அருகே அய்யனார் கருப்பசாமி கோயிலில் நடந்த சிலை எடுப்பு திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அய்யனார் கோயில் சிலை எடுப்பு திருவிழா: பொம்மையை தலையில் சுமந்து சென்று நேர்த்திக்கடன்
x
வாகைக்குளத்தில் அமைந்துள்ள அய்யனார் கருப்பசாமி கோவிலில் புரட்டாசி மாத திருவிழா நடைபெற்று வருகிறது. 2ஆம் நாளான இன்று வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் சிலை எடுப்பு திருவிழாவில் பங்கேற்றனர். ராணுவ வீரர், போலீஸ், குழந்தை, பாம்பு, தேள், டிராக்டர், கார், வீச்சு அரிவாளுடன் கூடிய அய்யனார், கருப்பசாமி சிலைகளை பக்தர்கள் தலையில் சுமந்து வந்தனர். கோயிலுக்கு செல்ல பாதை இல்லாததால், பக்தர்கள் சிலைகளைக் கொண்டு சேர்ப்பதில் சிறிது சிரமப்பட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்