பிள்ளைக்கு பாலியல் சீண்டல் அளித்த தாய் - போக்சோ சட்டத்தில் கைது செய்தது போலீஸ்

தேனாம்பேட்டையில் தனது மகளிடம் பாலியல் சீண்டல் செய்ததாக தாய் ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிள்ளைக்கு பாலியல் சீண்டல் அளித்த தாய் - போக்சோ சட்டத்தில் கைது செய்தது போலீஸ்
x
தேனம்பேட்டையில் வசித்து வரும் தொழிலாளி ஒருவர், தனது மனைவி, மாமியார் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இருவரும் சேர்ந்த தனது மகளை பாலியல் தொந்தரவு செய்வதாக அதில் தெரிவித்திருந்தார். புகாரின் அடிப்படையில் அந்த சிறுமியை காவல்துறையினர் அழைத்து விசாரணை நடத்தினர். கடந்த 3 ஆண்டுகளாக உடல் மற்றும் மனரீதியாக தனது தாய் பல்வேறு பாலியல் தொந்தரவு அளித்து வருவதாகவும், அதற்கு பாட்டியும் உடந்தை என சிறுமி கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, கும்பகோணத்தில் தலைமறைவாக இருந்த சிறுமியின் தாய் மற்றும் பாட்டியை கைது செய்த காவல்துறை, அவர்களை புழல் சிறையில் அடைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்