ரூ.80 லட்சம் மதிப்பு வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் - 4 பேரை பிடித்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை

சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு விமானத்தில் கடத்தப்பட இருந்த 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ரூ.80 லட்சம் மதிப்பு வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் - 4 பேரை பிடித்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை
x
சிங்கப்பூருக்கு ஒரு குழுவாக பயணம் செய்ய வந்த சென்னையை சேர்ந்த 4 பேரின் உடமைகளை, சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, துணிகளுக்கு இடையே அமெரிக்க டாலர்கள், ஐரோப்பிய யூரோ கரன்சிகளை கட்டுகட்டாக மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து, 4 பேரின் விமான பயணத்தை ரத்து செய்து, அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்