புகார் கொடுக்க வந்த பெண்ணுடன் தகாத உறவு - தட்டிக்கேட்ட கணவரை வீட்டிலேயே சிறை வைத்த காவல் உதவி ஆய்வாளர்

மனைவியுடன் தகாத உறவு வைத்திருப்பதை கேட்ட கணவரை அடித்து அவரது வீட்டிலேயே காவல் உதவி ஆய்வாளர் ஒருவர், சிறை வைத்த சம்பவம் சேலத்தில் அரங்கேறியுள்ளது.
புகார் கொடுக்க வந்த பெண்ணுடன் தகாத உறவு - தட்டிக்கேட்ட கணவரை வீட்டிலேயே சிறை வைத்த காவல் உதவி ஆய்வாளர்
x
சேலம் அன்னதானப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மலைவாசனுக்கும், அவரின் மனைவி மணிமேகலைக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. தனது கணவர் குறித்து அவ்வப்போது காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க சென்ற மணிமேகலைக்கு அங்கு சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் கலைசெல்வன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த மலைவாசன், இருவரையும் கண்டித்துள்ளார். இதனையடுத்து மலைவாசனை கடுமையாக தாக்கிய கலைச்செல்வன் அவரை அவரது வீட்டிலேயே சிறை வைத்துள்ளார். இதனையடுத்து ஜன்னல் வழியாக அவர் உதவி கோரியதை தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. இது குறித்து மலைவாசன் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தும் போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது.கணவர் -மனைவியிடையே ஏற்பட்ட தகராறை பயன்படுத்தி, புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி தகாத உறவு வைத்ததோடு மட்டுமல்லாமல், அவரது கணவரையும் தாக்கிய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்