ஆட்சியர் அலுவலகம் முன்பு 2 பெண்கள் தீக்குளிக்க முயற்சி
சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு இரண்டு பெண்கள் அடுத்தடுத்து தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
* மேட்டூரை சேர்ந்த பூங்கொடி என்ற பெண் தீடீரென உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார். பூங்கொடி என்ற பெண்ணை மீட்ட போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், நில பிரச்சனை காரணமாக பலமுறை புகார் கொடுத்தும் அதிகாரிகள் நடடிக்கை எடுக்காததால் இந்த முடிவு எடுத்ததாக கூறினார்.
* இதே போல் அதே பகுதியை சேர்ந்த தீபா என்ற பெண்ணும் நில பிரச்சனை காரணமாக ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றார். அடுத்தடுத்து இரண்டு பெண்கள் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story