கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட நாய் : கல்லூரி மாணவரின் புகாரில் 3 பேர் கைது

சென்னையில் தெருநாயை அடித்து கொன்ற புகாரில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட நாய் : கல்லூரி மாணவரின் புகாரில் 3 பேர் கைது
x
நெல்லை  மாவட்டத்தைச் சேர்ந்த நிஷால் ஜெயந்த், சென்னை முகப்பேரில்  உறவினர் வீட்டில் தங்கி படித்து வருகிறார். அவரது குடியிருப்பில் சுற்றித்திரிந்த நாய் ஒன்றை அந்த குடியிருப்பின் செயலாளர் மற்றும் காவலாளிகள் உள்ளிட்ட மூன்று பேர் கொடூரமாக அடித்துக் கொலை செய்துள்ளனர். இதனை , செல்போனில் வீடியோவாக எடுத்து, மிருகவதை எதிர்ப்பு ஆதரவாளர்களின் உதவியோடு ஜெஜெ நகர் காவல் நிலையத்தில் நிஷால் ஜெயந்த், புகார் அளித்தார். விலங்குகளை கொல்லுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து மூன்று பேரையும் கைது செய்த போலீசார், ஜாமீனில் அன்றே விடுவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்