குட்கா வழக்கு : ஜாமீன் மனு மீதான விசாரணை அக்.10க்கு ஒத்திவைப்பு

மாதவராவ் உள்பட மூவருக்கு ஜாமீன் வழங்க கூடாது என்ற மனுவை ஏற்றுக் கொண்ட சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி திருநீல பிரசாத், விசாரணையை அக்டோபர் 10ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
குட்கா வழக்கு : ஜாமீன் மனு மீதான விசாரணை அக்.10க்கு ஒத்திவைப்பு
x
குட்கா வழக்கில் கைது செய்யப்பட்ட  மாதவராவ், உமா சங்கர் குப்தா, சீனிவாச ராவ் ஆகியோருக்கு ஜாமீன் வழங்க சிபிஐ கடும் எதிர்ப்பு தெரிவித்து சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது. மூவருக்கும் ஜாமின் வழங்கினால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதாக  மனுவில் தெரிவித்துள்ளனர் . மனுவை ஏற்றுக் கொண்ட  சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி திருநீல பிரசாத், விசாரணையை அக்டோபர் 10ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். 

Next Story

மேலும் செய்திகள்