தமிழகத்தில் பரவலாக மழை...
தமிழகத்தில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது .
சென்னை:
தூத்துக்குடி:
தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவில் மழை பெய்தது.
கோரம்பள்ளம், வாகைக்குளம், மீளவிட்டான், துறைமுகம் ஆகிய பகுதிகளில் பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியது. தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர், திருநெல்வேலி செல்லும் சாலைகள் மழைநீர் தேங்கி காணப்படுகிறது.
ஊட்டி :
ஊட்டியில் பெய்த கனமழையால், கோத்தகிரி சாலை, மேட்டுப்பாளையம் சாலை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. 10க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்ததால், மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளது. அவற்றை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலை மற்றும் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
நாமக்கல் :
நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக நாமக்கல் அருகே முதலைபட்டி பகுதியில் மாலையில் சுமார் அரைமணி நேரம் கன மழை பெய்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வயல்களில் தண்ணீர் தேங்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
Next Story