கிரண் ராவ் வீட்டில் 2-வது நாளாக சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சோதனை

சென்னை போயஸ்தோட்டத்தில் உள்ள தொழிலதிபர் ரன்வீர்ஷாவின் நண்பர் இல்லத்தில் 2-வது நாளாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
கிரண் ராவ் வீட்டில் 2-வது நாளாக சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சோதனை
x
* ரன்வீர்ஷாவின் சைதாப்பேட்டை, மேல்மருவத்தூர் அடுத்த மோகல்வாடியில் உள்ள பண்ணை வீடு ஆகிய இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள  230 சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, சென்னை போயஸ்தோட்டத்தில் உள்ள ரன்வீர்ஷாவின் தொழில்முறை நண்பர் கிரண்ராவ் இல்லத்தில் 2-வது நாளாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் சோதனை மேற்கொண்டனர். 

* வீட்டை சுற்றி மண்ணில் புதைக்கப்பட்டிருந்த சிலைகள் புல்டோசர் உள்ளிட்ட இயந்திரங்கள் முலம் தோண்டியெடுக்கப்பட்டன. இதுவரை 5 கற்சிலைகள் மீட்கப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்