ரசாயன ஆலையை நிரந்தரமாக மூட கோரி கொட்டும் மழையில் 20 கிராம மக்கள் போராட்டம்

காரைக்குடி அருகே கோவிலூரில் செயல்பட்டு வரும் தனியார் ரசாயன ஆலையை மூடக்கோரி சுற்றியுள்ள 20 கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ரசாயன ஆலையை நிரந்தரமாக மூட கோரி கொட்டும் மழையில் 20 கிராம மக்கள் போராட்டம்
x
கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், 2 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.  இது குறித்து 15 நாட்களுக்குள்  ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளதால் போராட்டத்தை கைவிடுவதாக  காரைக்குடி எம்எல்ஏ-வும் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவருமான  ராமசாமி தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்