ரசாயன ஆலையை முற்றுகையிட முயன்ற பழ.கருப்பையா கைது

காரைக்குடி அருகே, கோவிலூரில் செயல்பட்டு வரும் தனியார் ரசாயன ஆலையை மூடக்கோரி சுற்றியுள்ள 20 கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ரசாயன ஆலையை முற்றுகையிட முயன்ற பழ.கருப்பையா கைது
x
* இன்று கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், 2 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.  

* இது குறித்து 15 நாட்களுக்குள்  ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளதால் போராட்டத்தை கைவிடுவதாக  காரைக்குடி எம்எல்ஏ-வும் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவருமான  ராமசாமி தெரிவித்தார்.

* இந்நிலையில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழ. கருப்பையா தடையை மீறி ஆலையை முற்றுகையிட முயன்றபோது போலீசாரால் கைது செய்யப்பட்டார். 

* இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், சிறைக்கு செல்வதற்கு தயாராகவே வந்த‌தாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்