மின் கம்பியில் உரசியதில் தீ பிடித்து எரிந்த லாரி..

பூந்தமல்லியில் கண்டெய்னர் லாரி தீ பிடித்து எரிந்த விபத்தில், ஒரு கோடியே 70 ரூபாய் மதிப்பிலான தோல் பொருட்கள் சேதமடைந்துள்ளன.
மின் கம்பியில் உரசியதில் தீ பிடித்து எரிந்த லாரி..
x
பூந்தமல்லியில் கண்டெய்னர் லாரி தீ பிடித்து எரிந்த விபத்தில், ஒரு கோடியே 70 ரூபாய் மதிப்பிலான தோல் பொருட்கள் சேதமடைந்துள்ளன. மாங்காடு அருகே தனியார் தொல் தொழிற்சாலை இயங்கி வருகிறது. அங்கிருந்து, ஸ்பெயின் நாட்டிற்கு ஏற்றுமதி செய்ய தோல் ஜர்கின்களை ஏற்றி கொண்டு, கண்டெய்னர் லாரி ஒன்று, பூந்தமல்லி-குன்றத்தூர் சாலையில்  சென்று கொண்டிருந்தது. அப்போது மேலே சென்ற மின் கம்பி உரசியதில் லாரி தீ பிடித்து எரிந்தது. தகவறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், அரை மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீயை அனைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்