பாதையில் விழுந்த மரம் - சுற்றுலா பயணிகளுடன் பாதி வழியில் நின்ற மலை ரயில்

குன்னூரில் மழை காரணமாக மலை ரயில் பாதையில் மரம் விழுந்தது.
பாதையில் விழுந்த மரம் - சுற்றுலா பயணிகளுடன் பாதி வழியில் நின்ற மலை ரயில்
x
குன்னூரில் மழை காரணமாக மலை ரயில் பாதையில் மரம் விழுந்தது. இதனால் ஊட்டியிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி வந்து கொண்டிருந்த மலை ரயில் சுற்றுலா பயணிகளுடன் பாதி வழியில் நின்றது. மரம் விழுவதை கண்ட டிரைவர் சாமார்த்தியமாக பிரேக் போட்டு ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தகவலறிந்த ரயில்வே ஊழியர்கள் விரைந்து சென்று, மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 45 நிமிடங்களுக்கு பின் மரம் அகற்றப்பட்டு ரயில் புறப்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்