3 உயிர்களை பறித்த ஏ.சி கேஸ் கசிவு - தடுப்பது எப்படி?
ஏ.சி யில் உள்ள வடிகட்டி தடுப்பில் தூசி அதிக அளவில் சேரும் போது, அதை சீரான இடைவெளியில் சுத்தம் செய்வது அவசியம்.
சென்னை கோயம்பேடு பகுதியில் வசித்து வந்தவர் சரவணன். இவரது மனைவி கலையரசி மற்றும் 8 வயது மகன் கார்த்திகேயன் ஆகியோர் திங்கட்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தனர். அடுத்த நாள் காலை 3 பேரும் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏசியில் இருந்த கேஸ் கசிவு காரணமாகவே அவர்கள் 3 பேரும் உயிரிழந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. ஆனால் என்ன நடந்தது என்பது குறித்து விசாரித்த போது அவர்கள் தவறான முறையில் ஏசியை பயன்படுத்தியதே காரணம் என்கிறார்கள் அக்கம்பக்கத்தினர். மின்தடை ஏற்பட்ட போது அவர்கள் ஜெனரேட்டரை கொண்டு ஏசியை இயக்கியதாகவும் இதன் காரணமாகவே விபத்து நடந்ததாகவும் கூறப்படுகிறது. ஜெனரேட்டரில் இருந்து வெளி வரும் புகையும், ஏசியில் இருந்து வெளிவரும் காற்றும் ஒன்றுக்கொன்று கலந்து வேதியியல் மாற்றத்தை ஏற்படுத்தியதால் தான் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்து இருக்கிறார்கள். சீசனுக்கு தகுந்தார்போல மின்சாதன பொருட்களையும் பராமரிக்க வேண்டியது இங்கு அவசியமான ஒன்று. முறையான இடைவெளியில் மின்சாதன பொருட்களை பழுது நீக்கி சரிசெய்து கொள்வதன் மூலம் விபத்துகளை தவிர்க்க முடியும் என்கிறார் ஏசி தொழில்நுட்ப வல்லுநர் கார்த்தி.. சென்னை கோயம்பேடு பகுதியில் வசித்து வந்தவர் சரவணன். இவரது மனைவி கலையரசி மற்றும் 8 வயது மகன் கார்த்திகேயன் ஆகியோர் திங்கட்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தனர். அடுத்த நாள் காலை 3 பேரும் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏசியில் இருந்த கேஸ் கசிவு காரணமாகவே அவர்கள் 3 பேரும் உயிரிழந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. ஆனால் என்ன நடந்தது என்பது குறித்து விசாரித்த போது அவர்கள் தவறான முறையில் ஏசியை பயன்படுத்தியதே காரணம் என்கிறார்கள் அக்கம்பக்கத்தினர். மின்தடை ஏற்பட்ட போது அவர்கள் ஜெனரேட்டரை கொண்டு ஏசியை இயக்கியதாகவும் இதன் காரணமாகவே விபத்து நடந்ததாகவும் கூறப்படுகிறது. ஜெனரேட்டரில் இருந்து வெளி வரும் புகையும், ஏசியில் இருந்து வெளிவரும் காற்றும் ஒன்றுக்கொன்று கலந்து வேதியியல் மாற்றத்தை ஏற்படுத்தியதால் தான் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்து இருக்கிறார்கள். சீசனுக்கு தகுந்தார்போல மின்சாதன பொருட்களையும் பராமரிக்க வேண்டியது இங்கு அவசியமான ஒன்று. முறையான இடைவெளியில் மின்சாதன பொருட்களை பழுது நீக்கி சரிசெய்து கொள்வதன் மூலம்வி பத்துகளை தவிர்க்க முடியும் என்கிறார் ஏசி தொழில்நுட்ப வல்லுநர் கார்த்தி..
நவீன வசதிகள் நமக்கு எந்த அளவுக்கு முக்கியமோ அதைப்பற்றி முழுமையாக தெரிந்து கொள்வதும் அவசியம்.. ஒவ்வொரு சீசனுக்கும் நமக்கு தேவையான பொருட்களை முறையான பரிசோதனைக்கு பிறகு பயன்படுத்துவதன் மூலம் உயிரிழப்புகளை தவிர்க்க முடியும்..
Next Story