கருணாஸ் உள்ளிட்ட 4 எம்.எல்.ஏக்களுக்கு விரைவில் நோட்டீஸ்

சட்டமன்ற உறுப்பினர்கள் கருணாஸ் உள்ளிட்ட 4 பேருக்கு தகுதி நீக்குவது தொடர்பாக விரைவில், நோட்டீஸ் அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கருணாஸ் உள்ளிட்ட 4 எம்.எல்.ஏக்களுக்கு விரைவில் நோட்டீஸ்
x
தினகரன் ஆதரவாளர்களான கருணாஸ், அறந்தாங்கி ரத்தினசபாபதி, கள்ளக்குறிச்சி பிரபு, விருத்தாச்சலம் கலைச்செல்வன் ஆகிய 4எம்.எல்.ஏக்களுக்கு,  நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதிமுக கொறடா ராஜேந்திரன் அளித்த புகாரில், 4 பேருக்கும், விரைவில் நோட்டீஸ் சபாநாயகர் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த நோட்டீசில், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 4 பேரையும், சட்ட விதி 6 - ன் படி, ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது என விளக்கம் கேட்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.



Next Story

மேலும் செய்திகள்