வரும் 4 ஆம் தேதி அரசு ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்...

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய கோரி வரும் 4ஆம் தேதி வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற உள்ள நிலையில் அரசுப்பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வரும் 4 ஆம் தேதி அரசு ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்...
x
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பது உட்பட 5 கோரிக்கைகளை வலியுறுத்தி, 2 ஆண்டுகளாக அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக வரும் 4 ம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தமாக, ஒட்டுமொத்தமாக விடுப்பு எடுத்து போராட்டம் நடத்த உள்ளனர்.  இதில் பல லட்சம் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் கலந்து கொள்ள உள்ளதாக ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அரசுப் பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்