குட்கா முறைகேடு வழக்கு : அதிகாரி சிவக்குமார் மீண்டும் சிறையில் அடைப்பு

குட்கா முறைகேடு வழக்கில் சிபிஐ காவல் முடிந்து, ஆஜர்படுத்தப்பட்ட உணவு பாதுகாப்புத்துறை முன்னாள் அதிகாரி சிவக்குமாரை, மீண்டும் சிறையில் அடைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குட்கா முறைகேடு வழக்கு : அதிகாரி சிவக்குமார் மீண்டும் சிறையில் அடைப்பு
x
குட்கா முறைகேடு வழக்கில், திருவள்ளூர் மாவட்ட சுகாதார ஆய்வாளரும், முன்னாள் உணவு பாதுகாப்புதுறை அதிகாரியுமான சிவகுமார் கடந்த மாதம் 25ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவரை 3 நாள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி வழங்கப்பட்டது. காவல் நிறைவு பெற்றதை தொடர்ந்து, இன்று மீண்டும்  சிறப்பு நீதிமன்ற நீதிபதி திருநீலபிரசாத் முன்னிலையில், சிவக்குமார் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து  அவரை மீண்டும்  சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். ஏற்கனவே, சிவக்குமாரை அக்டோபர் 4 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்