107 வயது மூதாட்டியின் பிறந்த நாள் : திருவிழா போல கொண்டாடிய உறவினர்கள்

திருச்சி மாவட்டம் முசிறி அருகே 100 வயதைத் தாண்டிய மூதாட்டியின் பிறந்த நாளை அவரது உறவினர்கள் விமர்சையாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
107 வயது மூதாட்டியின் பிறந்த நாள் : திருவிழா போல கொண்டாடிய உறவினர்கள்
x
* திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள ஏவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கொண்ணாட்சி. இவருக்கு தற்போது 107 வயது நடப்பதாக அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இவருக்கு கடந்த 1930 ஆம் ஆண்டு பெரியசாமி என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

* இவருக்கு 5 மகன்களும் 8 மகள்களும் சுகப்பிரசவத்தில் பிறந்தனர். தற்போது, அவருக்கு 38 பேரன் பேத்திகளும் 52 இரண்டு கொள்ளு பேரன் பேத்திகளும் 10 எள்ளு பேரன் பேத்திகளும் உள்ளனர்.

* இந்த நிலையில், 107 ஆவது பிறந்த நாளை ஒட்டி, அவரது குடும்பத்தினர் ஆரவாரத்துடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினர். மேலும், உறவினர்களை அழைத்து விருந்தளித்தனர்.

* தற்போது வரை இவருக்கு பிபி, சுகர் போன்ற எந்த வித உடல் உபாதைகளும் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்ந்து வருகிறார். இந்த வயதிலும் தன்னுடைய உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு காரணம் சோளம், கம்பு உள்ளிட்ட உணவு வகைகள் தான் என்று கூறும் மூதாட்டி அவ்வளவாக மருத்துவமனைக்கு சென்றதே இல்லை என்றும் தெரிவிக்கிறார்.


* கிராமத்தில் பிளக்ஸ் பேனர்களை வைத்தும், வீட்டின் முன்பு பந்தல் போட்டு வாழை மரங்களை கட்டியும் பிறந்த நாளினை திருவிழாவைப் போல சிறப்பாக கொண்டாடியதை ஊர்மக்கள் கண்டுவியந்தனர்.



Next Story

மேலும் செய்திகள்