கரைக்குடி ரசாயன ஆலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நல்ல தீர்வு கிடைக்கும் - அமைச்சர் பாஸ்கரன்

சிவகங்கையில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் ரசாயன ஆலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நல்ல தீர்வு கிடைக்கும் என்று அமைச்சர் பாஸ்கரன் உறுதியளித்துள்ளார்.
கரைக்குடி ரசாயன ஆலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நல்ல தீர்வு கிடைக்கும் - அமைச்சர் பாஸ்கரன்
x
கதர் மற்றும் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் பாஸ்கரன் தலைமையில்  ஆய்வு கூட்டம் நடைபெற்றது.   நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் , மாவட்ட ஆட்சி தலைவர் மற்றும் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் முன்னிலையில் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் கரைக்குடி அருகில் உள்ள கோயிலூரில் தனியார் ரசாயன ஆலையின் இயக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில்   உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய அமைச்சர் பாஸ்கரன் பொதுமக்கள் இதுகுறித்து அச்சமடைய வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்