பிரியாணி கடையில் பணம் தர மறுத்து 4 பேர் தகராறு

சென்னையில் பிரியாணி கடையில் பணம் தரமறுத்து தகராறில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
பிரியாணி கடையில் பணம் தர மறுத்து 4 பேர் தகராறு
x
சென்னை திருவொற்றியூரில் உள்ள கடையொன்றில் பிரியாணி சாப்பிட்டுவிட்டு பணம் தர மறுத்து குடிபோதையில் இருந்த 4 இளைஞர்கள் ரகளையில் ஈடுபட்டனர். அவர்கள் சாலையில் சிறுநீர் கழித்தபடியே சுற்றி திரிந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.  

இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து கடையொன்றில் பதுங்கியிருந்த 4 பேரையும் கைது செய்தனர். புதுவண்ணாரப் பேட்டையை சேர்ந்த அனைவரும் விசாரணைக்கு பின் சிறையில் அடைக்கப்பட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்