திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் நடைபெறுமா?

திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல் நடத்தப்படுவதில் புதிய சிக்கல் எழுந்துள்ளது. தற்போதைய நிலையில், திருப்பரங்குன்றம் தேர்தல் மேலும் தள்ளி போகும் சூழல் உருவாகி உள்ளது.
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் நடைபெறுமா?
x
* திருப்பரங்குன்றம் தொகுதியில் இருந்து சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக் கப்பட்டிருந்த ஏ.கே. போஸ் , கடந்த ஆகஸ்ட் 2 ம் தேதி, மதுரையில் காலமானார். 

* எனவே, திருப்பரங்குன்றம் தொகுதி காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. திருப்பரங்குன்றம் தொகுதியில், ஏ.கே.  போஸ்ஸை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணன், கடந்த மாதம் 7- ம் தேதி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவிடம்  மனு ஒன்றை கொடுத்துள்ளார்.

* அதில், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தொடர்பாக அப்போதைய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிடம் கைரேகை பெறப்பட்டது தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதாகவும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 116- ன்படி தொகுதி தொடர்பாக வழக்கு இருக்கும்போது, அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் மறைந்தால், நிலுவையில் உள்ள அந்த வழக்கு தொடர்பாக அரசிதழ் மற்றும் செய்தித்தாள்களில் அறிவிப்பு செய்த பிறகே, தொகுதி காலியானதாக அறிவிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

* ஆனால் அந்த நடைமுறைகளை பின்பாற்றாமல் தேர்தல் ஆணையம் திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. போஸ் மறைவைத் தொடர்ந்து, தொகுதி காலியானதாக அறிவித்திருப்பது மக்கள் பிரதி நிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 116ன் மீறியாக செயலாகும் என்றும் டாக்டர் சரவணன் தெரிவித்துள்ளார். 

* தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணனின் இந்த புகார் மனுவைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் நடைபெறுவதில் சிக்கல் உருவாகி யுள்ளதுடன், இடைத்தேர்தல் மேலும் தள்ளி போக கூடும் என அரசியல் வட்டாரத்தில், கருத்து நிலவுகிறது.


Next Story

மேலும் செய்திகள்