இனயம் துறைமுகத்திற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் - பொன். ராதாகிருஷ்ணன்

கன்னியாகுமாரியில் இனயம் துறைமுகத்திற்கான ஆய்வு அறிக்கை தயாரிக்கும் பணி முடிந்துள்ளதாகவும், அடுத்தக்கட்ட நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இனயம் துறைமுகத்திற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் - பொன். ராதாகிருஷ்ணன்
x
சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில், பொருளாதார மேம்பாட்டில் துறைமுகத்தின் பங்கு என்ற தலைப்பில், கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்ட இந்த கூட்டத்தில் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கன்னியாகுமாரியில் இனயம் துறைமுகத்திற்கான ஆய்வு அறிக்கை தயாரிக்கும் பணி முடிந்துள்ளதாகவும், அடுத்தக்கட்ட நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்