மதுரை மத்திய சிறையில் போலீசார் அதிரடி சோதனை

மதுரை மத்திய சிறையில் 150க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
மதுரை மத்திய சிறையில் போலீசார் அதிரடி சோதனை
x
சென்னை புழல் சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை நடத்தியது தெரியவந்தது. இ​தைத்தொடர்ந்து கைதிகள் 4 பேரும், அவர்களுக்கு உதவிய சிறை வார்டன்கள் 8 பேரும் அதிரடியாக மாற்றப்பட்டனர். மேலும்  தமிழகத்தின் பல்வேறு மத்திய சிறைகளில்  சோதனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரை மாநகர காவல் உதவி ஆணையர் வெற்றிச்செல்வன் தலைமையில் 150க்கும் மேற்பட்ட போலீசார் மதுரை ஆரப்பாளையத்தில் உள்ள  மத்திய சிறையில் காலை 7 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். சிறை வளாகம், கைதிகள் அறை, சமையலறை, மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சிறையில் உள்ள கைதிகளிடம் இருந்து பிளேடு மற்றும் இரும்பு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.



Next Story

மேலும் செய்திகள்