அரசு மருத்துவக்கல்லூரி விடுதியில் லேப்டாப் திருடியவர் கைது
சென்னை அரசு மருத்துவ கல்லூரி விடுதியில் லேப்டாப் திருடிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை அரசு மருத்துவ கல்லூரி விடுதியில் லேப்டாப் திருடிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை அரசு மருத்துவ கல்லூரியில் நான்காம் ஆண்டு படிக்கும் விக்னேஷ், ஸ்டான்லி மருத்துவமனை எதிரே உள்ள விடுதியில் தங்கியுள்ளார். கடந்த 4 மாதம் முன்பு விடுதி அறையில் லேப்டாப் வைத்துவிட்டு வெளியே சென்றுவிட்டு வந்து பார்த்தபோது காணாமல் போனது. புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.லேப்டாப் திருடியது, அமைந்தகரை பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பது தெரிய வந்தது. அவரிடம் இருந்து நான்கு லேப்டாப் மற்றும் செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story