தனியார் குடோனில் 5 டன் குட்கா பறிமுதல்

சென்னை சிட்லபாக்கம் அருகே தனியார் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 டன் குட்காவை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்துள்ளனர்.
தனியார் குடோனில் 5 டன் குட்கா பறிமுதல்
x
* சென்னை நீலங்கரை பகுதியில் குட்கா விற்பனை செய்த நபரை கைது செய்து அடையாறு போலீசார் விசாரணை நடத்தினர். அந்த நபர் அளித்த தகவலின் அடிப்படையில் சிட்லபாக்கத்திற்கு காவல்துறையினர் வந்துள்ளனர். அப்போது, 30 லட்சம் மதிப்புள்ள 5 டன் குட்கா வேனில் இருந்து கீழே இறக்கப்பட்டுக் கொண்டிருந்தது. உடனடியாக சுற்றி வளைத்த போலீசார், 5 டன் குட்காவை பறிமுதல் செய்தனர். 

* இது தொடர்பாக முத்துராஜ், முத்து சுதாகர் ஆகிய இருவரை கைது செய்துள்ளனர். விசாரணையில், நெல்லை சேர்ந்த அவர்கள் கடந்த 6 ஆண்டுகளாக அந்த பகுதியில் தண்ணீர் கேன் போடும் தொழிலை செய்ததும், அந்த வாகனத்தில் குட்காவை மறைத்து வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்