கருணாஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி கோரிக்கை

கலவரத்தை தூண்டும் வகையில் பேசியுள்ள, கருணாஸ் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வலியுறுத்தி உள்ளது.
கருணாஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி கோரிக்கை
x
* கலவரத்தை தூண்டும் வகையில் பேசியுள்ள, கருணாஸ் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வலியுறுத்தி உள்ளது. கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த சமுதாயத்தை கொச்சைப்படுத்தி பேசுவது தவறான பாதைக்கு வழி காட்டுவது எனவும் தனிப்பட்ட விளம்பரம் தேடி கொள்வதற்காக இப்படி பேசுவதை கருணாஸ் தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். 

* மேலும், மதுவுக்காக தினமும் ஒரு லட்ச ரூபாய் செலவு செய்வதாக, எம்.எல்.ஏ.வான கருணாஸ் கூறலாமா என கேள்வி எழுப்பியுள்ள ஈஸ்வரன், கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய கருணாஸ் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசை வலியுறுத்தி உள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்