ஒரே நாளில் ஏழு கோயில்களில் கும்பாபிஷேகம் : விழா கோலம் பூண்ட கிராமம்

திருவிடைமருதூர் அருகே உள்ள திருமலைராஜபுரத்தில் ஒரே நாளில் ஏழு கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றதால், கிராமம் முழுவதும் விழா கோலம் பூண்டு காட்சியளித்தது.
ஒரே நாளில் ஏழு கோயில்களில் கும்பாபிஷேகம் : விழா கோலம் பூண்ட கிராமம்
x
திருமலைராஜபுரத்தில் உள்ள வரசித்தி விநாயகர், சித்திவிநாயகர், அய்யனார், தூண்டில்வீரன், பிடரரி அம்மன், மகா மாரியம்மன், கன்னியம்மன் என ஏழு கோயில்களில் ஒரே நாளில் கும்பாபிஷேகம் நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர். அதன் படி இன்று அனைத்து கோயில்களிலும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள், திருமலைராஜபுரத்தில் ஒன்று திரண்டனர். இதனால் கிராமத்தின் வீதிகளில், எங்கு திரும்பினாலும் மக்களின் தலைகளாகவே காட்சியளித்தன.

Next Story

மேலும் செய்திகள்