செங்கோட்டை, தென்காசி பகுதியில் 144 தடை உத்தரவு - வரும் 22 ஆம் தேதி வரை தொடரும்...

வரும் 22 ஆம் தேதி வரை செங்கோட்டை மற்றும் தென்காசி பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளதாக நெல்லை மாவட்ட எஸ்.பி. அருண்சக்தி குமார் தெரிவித்துள்ளார்.
செங்கோட்டை, தென்காசி பகுதியில் 144 தடை உத்தரவு - வரும் 22 ஆம் தேதி வரை தொடரும்...
x
* வரும் 22 ஆம் தேதி வரை செங்கோட்டை மற்றும் தென்காசி பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளதாக நெல்லை மாவட்ட எஸ்.பி. அருண்சக்தி குமார் தெரிவித்துள்ளார்.

* செங்கோட்டையில் நேற்று முன்தினம் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில்  கல்வீச்சு சம்பவம் நடந்தது. இதை தொடர்ந்து தடியடி நடத்தி, கலவரத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கலைத்தனர். 

* இதுதொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ஒரு தரப்பினர் தாலுக்கா அலுவலகம் முன்பு, நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேச்சு நடத்தியதை அடுத்து கலைந்து சென்றனர். இதனிடையே, கடையநல்லூரில் 32 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு குளத்தில் கரைக்கப்பட்டது. தென்மண்டல ஐ.ஜி. சண்முக ராஜேஸ்வரன் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்