சென்னை : தனக்குதானே தீ வைத்துக்கொண்ட வீட்டு உரிமையாளர்..!

சென்னையில் வீட்டின் உரிமையாளர் தனக்கு தானே தீ வைத்துக்கொண்டு வாடகைக்கு இருப்பவர் கொளுத்தியதாக கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது.
சென்னை : தனக்குதானே தீ வைத்துக்கொண்ட வீட்டு உரிமையாளர்..!
x
சென்னை, வளசரவாக்கம் பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் என்பவர் நேற்று இரவு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்துள்ளார். அப்போது அவர் உடலில் தீ பற்றி எரிந்துள்ளது. இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தன் வீட்டில் குடியிருக்கும் நந்தகுமார் என்பவர் தன்னை தீ வைத்து கொளுத்தியதாக போலீசாரிடம் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார். 

ஆனால் தினேஷ்குமார், மண்ணெண்ணெய்யை ஊற்றி தனக்குதானே தீ வைத்துக்கொண்டது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. அடிக்கடி மது அருந்திவிட்டு தனது வீட்டில் குடியிருப்பர்களிடம்  தினேஷ்குமார் தகராறில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. 


Next Story

மேலும் செய்திகள்