கும்கி யானைகளுக்கான பயிற்சி முகாம் நிறைவு...

முதுமலை யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கான பயிற்சி நிறைவடைந்ததை அடுத்து யானைகள் அனுப்பி வைக்கப்பட்டன.
கும்கி யானைகளுக்கான பயிற்சி முகாம் நிறைவு...
x
முதுமலை யானைகள் சரணாலயத்தில்  கடந்த 90 நாட்களாக நடைபெற்ற வந்த கும்கி யானைகளுக்கான பயிற்சி முகாம் 12-ம் தேதி நிறைவுபெற்றது. இதில் கேரளாவில் இருந்து 3 யானைகளும், தமிழகத்தில் இருந்து 5 யானைகளும் பங்கேற்றன. மரம் இழுத்தல், காட்டு யானைகளை கட்டுப்படுத்துதல்,  ரோந்துப்பணி, பாகன் கட்டளையை ஏற்று நடத்தல் உள்ளிட்ட பயிற்சிகள் யானைகளுக்கு அளிக்கப்பட்டன.  இந்நிலையில் கும்கி யானைகள் பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. இதில் தமிழக, கேரள வன உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது பயிற்சி முடித்த யானைகளுக்கு சான்றிதழ் மற்றும் பாகன்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து யானைகள் லாரிகளில் ஏற்றி அதன் இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 

Next Story

மேலும் செய்திகள்