சீருடையில் இருந்த காவலரிடம் செல்போன் பறிப்பு : சிசிடிவி-யில் பதிவான பரபரப்பான காட்சிகள்

சென்னையில், சீருடையில் இருந்த ஆயுதப்படை காவலரிடம் செல்போனை பறித்துச் சென்ற கும்பலை போலீசார் கைது செய்தனர்.
சீருடையில் இருந்த காவலரிடம் செல்போன் பறிப்பு : சிசிடிவி-யில் பதிவான பரபரப்பான காட்சிகள்
x
ஆயுதப்படை காவலர்  மணிமாறன், கடந்த 2-ஆம் தேதியன்று மந்தைவெளியில் உள்ள தனது வீட்டில் இருந்து பணிக்கு சென்றபோது, பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் அவரது செல்போனை பறித்துச் சென்றனர். அவர் அளித்த புகாரின்பேரில், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை அபிராமபுரம் போலீசார் ஆய்வு செய்தனர்.

சிசிடிவி உதவியோடு 4 பேரை கைது செய்த போலீசார்

சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தபோது, மந்தைவெளி, அபிராமபுரம், மயிலாப்பூர், ராயப்பேட்டை பகுதிகளில் அடுத்தடுத்த நாள்களில் செல்போன் பறிப்பில் சிலர் ஈடுபட்டதை போலீசார் கண்டுபிடித்தனர். அதன் அடிப்படையில், ஓட்டேரி, கொடுங்கையூர் பகுதிகளைச் சேர்ந்த வெங்கடேசன், மேகசூர்யா என்ற பேய்க்குழந்தை, சரவணன், மற்றும் 17 வயது சிறுவன் என 4 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4 போன்கள், 2 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 


Next Story

மேலும் செய்திகள்