மாதவராவ் குடோனில் டன் கணக்கில் குட்கா பறிமுதல்

தமிழகத்தை உலுக்கிய குட்கா ஊழல் விவகாரத்தில் அதிரடி திருப்பமாக தொழிலதிபர் மாதவராவ் குடோனில் இருந்து டன் கணக்கில் குட்காவும், 53 எந்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
மாதவராவ் குடோனில் டன் கணக்கில் குட்கா பறிமுதல்
x
தமிழகத்தை உலுக்கிய குட்கா ஊழல் விவகாரத்தில் அதிரடி திருப்பமாக தொழிலதிபர் மாதவராவ் குடோனில் இருந்து டன் கணக்கில் குட்காவும், 53 எந்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. 5 நாள் காவல் முடிந்து, மாதவராவ் உள்ளிட்ட 5 பேரும், சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களின் காவலை மேலும் 3 நாட்கள் நீட்டித்து, நீதிபதி உத்தரவிட்டதால் மாதவராவை நுங்கம்பாக்கம் சிபிஐ அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பல மணி நேரம் நீடித்த இந்த விசாரணையில் பல புதிய தகவல்களை மாதவராவ் வெளியிட்டுள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன. இதனிடையே, குட்கா வழக்கில் நேரில் ஆஜர் ஆன காவல்துறை ஆய்வாளர் சம்பத் குமாரிடம் சிபிஐ அதிகாரிகள் 8 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்