மதுரையில் கால்வாய் தூர்வாராததால் தொற்று நோய் பரவும் அபாயம்...

மதுரையில் பிரதான நீர்வரத்து கால்வாய் முட்புதர்களால் சூழ்ந்து காணப்படுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது.
மதுரையில் கால்வாய் தூர்வாராததால் தொற்று நோய் பரவும் அபாயம்...
x
மதுரை மாவட்டம் திருமங்கலம் கக்கன் காலனி பிரதான நீர்வரத்து கால்வாய் 4 ஆண்டுகளுக்கு முன்பு 11 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது. இந்த கால்வாய் பணிகள் முழுமை அடையாததாலும், தூர்வாரப்படாததாலும், முட்புதர்களால் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உருவாகி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக நீர்வரத்து கால்வாயை தூர்வார வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்