சென்னை : 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர்
6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை சேத்துப்பட்டை சேர்ந்த 55 வயதான நாகமுத்து என்பவர் அதே பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது, நாகமுத்து பாலியல் ரீதியாக சிறுமிக்கு தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
* இதையடுத்து சிறுமியின் உறவினர்கள் நாகமுத்துவை பிடித்து கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதனைதொடர்ந்து நாகமுத்து மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story